குழந்தை இல்லை: கணவன்-மனைவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குழந்தை பாக்கியம் இல்லை என்ற காரணத்தால் கணவனும், மனைவியும் தற்கொலை செய்துகொண்டனர்.
திருவான்மியூர் பெரியார் நகரைச் சேர்ந்த மணிகண்டன் (27). இவர் மனைவி தனலட்சுமி (24). இவர்கள்இருவருக்கும் திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை என்பதால் அதற்காக சிகிச்சை பெற்றுவந்தனர்.இந் நிலையில் திருக்கழுகுன்றத்தில் உள்ள தனது தந்தை நாகப்பனுடன் தொலைபேசியில் பேசிய மணிகண்டனும்தனலட்சுமியும், மகப்பேறு டாக்டரிடம் சென்று வந்தது குறித்து விளக்கினர். அப்போது இருவரும் அழுதபடியேபேசியதால் பதறிப்போன நாகப்பன் உடனடியாக சென்னை புறப்பட்டு வந்தார்.
மகன் மணிகண்டனின் வீட்டை அடைந்த அவர் கதவை நெடுநேரம் தட்டியும் திறக்கவில்லை. இதையடுத்துஅக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியோடு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார். அங்கு ஒரேசேலையில் இருவரும் தூக்கு போட்டு பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications