மும்பை-தேடப்படும் 2 தீவிரவாதிகள்

Subscribe to Oneindia Tamil

மும்பை:

மும்பை தொடர் ரயில் குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் இரு குற்றவாளிகளின்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

2 top suspects in Mumbai blasts
சபியூதீன் மற்றும் முகம்மத் பயாஸ் ஆகியோர் தான் அந்த இருவர். இவர்கள் தான் குண்டு வெடிப்புகளுக்குமுக்கியக் காரணம் என்று இதுவரை நடந்த விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த இருவருமே கடந்த சில மாதங்களாகவே தலைமறைவாக உள்ளனர். குஜராத்திலும் மகாராஷ்டிரத்திலும் சிலமாதங்களுக்கு முன் ஆர்டிஎக்ஸ் வெடி பொருட்களை உளவுப் பிரிவினர் கைப்பற்றினர். இதையடுத்து இந்தஇருவரும் தலைமறைவாகினர்.

இப்போது மும்பை குண்டு வெடிப்பில் இவர்கள் மீதே சந்தேகம் வலுத்துள்ளது. இவர்களைத் தவிர ரகில் என்றடிராவல் ஏஜென்சி நடத்தி வந்த வாலிபரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

போலி பாஸ்போர்ட் தயாரிப்பதில் எப்ஸ்பர்ட் இந்த ராகில். மும்பை கிராண்ட் ரோட்டில் ஏஜென்சி நடத்தி வந்தராகிலுக்கு லஷ்கர்-ஏ-தொய்பாவுடன் நெருங்கிய தொடர்புள்ளதும் தெரியவந்துள்ளது.

பாக். நடத்திய குண்டுவெடிப்பு:

இதற்கிடையே இந்த குண்டுவெடிப்புகளுக்கு பாகிஸ்தானே காரணம் என இந்தியா கருதுகிறது. தீவிரவாதிகள்உதவியோடு பாகிஸ்தான் தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக மத்திய அரசுக்கு உளவுத்துறை அறிக்கைகொடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் மத்திய அரசிடம்பேசியுள்ளார். பாகிஸ்தானின் உதவியோடு தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு உதவ ரெடி-முஷாரப்:

குண்டு வெடிப்பில் தங்கள் மீதே இந்தியாவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் இந்த குண்டு வெடிப்புகள்தொடர்பாக இந்தியா நடத்தும் விசாரணைகளுக்கு உதவத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ்முஷாரப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தாக்குதலை யார் நடத்தியிருந்தாலும் அவர்களைமன்னிக்க முடியாது. இது தொடர்பான விசாரணைகளுக்கு நான் அனைத்து உதவிகளையும் செய்யத் தயார். இதில்இந்தியாவுக்கு பாகிஸ்தான் அரசு துணை நிற்கும் என்று கூறியுள்ளார்.

மன்மோகன் இன்று மும்பை பயணம்:

இதற்கிடையே பிரதமர் மன்மோகன் சிங் இன்று மும்பை சென்றார். குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களைசந்தித்து ஆறுதல் கூறிய அவர் பின்னர் நிருபர்களிடம் பேசுகையில்,

இந்தத் தீவிரவாதத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் பின்புலம் உள்ளது. தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஒடுக்காத வரைபாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகள் ஏதும் சாத்தியமில்லை என்றார்.

இதன் மூலம் அடுத்தவாரம் நடக்கவிருந்த இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகள் ரத்தாகின்றன.

கலங்கடிக்கும் புரளிகள்:

மும்பையிலிருந்து இன்று புத் கயா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஆனால் இது வெறும் புரளி என பின்னர் தெரிய வந்தது.

இன்று காலை மும்பையிலிருந்து பீகார் மாநிலம் புத் கயாவுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக பாந்த்ரா ரயில் நிலையஅதிகாரிக்கு தொலைபேசி தகவல் வந்தது.

இதையடுத்து புத்கயா எக்ஸ்பிரஸ் ரயில் நறுத்தப்பட்டு, அனைத்துப் பெட்டிகளும் சோதனையிடப்பட்டன. வெடிகுண்டு மிரட்டல் குறித்து அறிந்த பயணிகள் பலர்தங்களது பயணத்தை கைவிட்டு விட்டு அவசர அவசரமாக ரயில் நிலையத்திலிருந்து வெளியேறினர்.

ஆனால், அந்த ரயிலில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதேபோல மும்பையில் உள்ள வேறு சில ரயில் நிலையங்களிலும் கூட இதேபோல வெடிகுண்டு புரளி இன்று பயணிகளிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+