குண்டுவெடிப்பு: அனாதையான குழந்தைகளுக்கு உதவும் மதரசாக்கள்
பெங்களூர்:
மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குடும்பத்தை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட குழந்தைகளுக்குஉதவ கர்நாடக மதரசாக்கள் சங்கம் முன் வந்துள்ளது.
கர்நாடக மதரசாக்கள் சங்கமான அன்ஜுமன்-இ-மதரிஸ் அமைப்பின் கூட்டம் பெங்களூரில் நடந்தது. இக்கூட்டத்தில் மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.கூட்டத்திற்குப் பின்னர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மெளலானா முகம்மது அன்வர் ரஷீதி வெளியிட்டஅறிக்கையில், இதுபோன்ற ஈவு இரக்கமற்ற காரியத்தில் ஈடுபடுபவர்களை மன்னிக்கக் கூடாது. இந்தசம்பவத்திற்குக் காரணமானவர்களைப் பிடித்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
பலியானவர்களின் குடும்பங்களுக்கு போதிய உதவிகளை மத்திய அரசும், மகாராஷ்டிர அரசும் செய்யவேண்டும். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.
இந்த வெடிகுண்டுச் சம்பவத்தில் உற்றார், உறவினரை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டகுழந்தைகளுக்கு நிதியுதவி செய்ய கர்நாடக மதரசாக்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
அந்தக் குழந்தைகள் எந்த மதம் என்ற பாரபட்சம் பார்க்காமல் அத்தனை பேருக்கும் நிதியுதவியும், பிறஉதவிகளும் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார் ரஷீதி.
தங்களது அமைப்பின் முடிவை தெரிவிப்பதற்காக மும்பைக்கு ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளதாக அமைப்பின்தலைவர் இத்ரீஸ் ஹப்பன் ரஹிமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications