சசி ஆக்கிரமித்த நிலத்தை மீட்க போராட்டம்
சென்னை:
சசிகலாவால் ஆக்கிரமிக்கப்பட்ட, தலித் சமுதாயத்தினருக்குச் சொந்தமான 53 ஏக்கர்நிலத்தை மீட்கும் போராட்டம் வருகிற 22ம் தேதி நடைபெறும் என காஞ்சிபுரம்மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் அண்ணா முதல்வராக இருந்தபோது 53 ஏக்கர்நிலம் தலித்துகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.இந்த நிலம் உள்ள இடத்துக்கு அருகேதான் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின்ஆடம்பர பங்களா உள்ளது. இந்த நிலத்தை கடந்த 1992ம் ஆண்டு சசிகலாஆக்கிரமித்துக் கொண்டதாக சர்ச்சசை எழுந்துள்ளது.
நில உரிமையாளர்களுக்குத் தெரியாமலேயே அவர்களது பட்டாக்கள் சசிகலாவின்பினாமிகளின் பெயரில் மாற்றப்பட்டு விட்டதாகவும், இந்த நிலத்தை மீண்டும் மீட்டுக்கொடுக்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஞ்சிபுரம்மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சங்கர், கருணாநிதிக்கு கடிதம்எழுதியிருந்தார்.
முதல்வர் கருணாநிதி இந்த சம்பவத்தை நவீன பஞ்சமி நில ஆக்கிரமிப்பு என்றுவர்ணித்திருந்தார். இந்த நில ஆக்கிரமிப்பு தொடர்பாக பாத்திர பதிவு அலுலகங்களில் விசாரணையும்நடந்து வருகிறது. இந்த நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட தலித் நிலங்களை மீட்க வருகிற22ம் தேதி விவசாயிகளுடன் சேர்ந்து நில மீட்புப் போராட்டம் நடத்தப்படும் எனசிபிஎம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications