திருச்சியில் ரயில்களை கவிழ்க்க சதி
திருச்சி:
ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து ரயில்களை கவிழ்க்க சதிநடந்துள்ளது. ரயில்வே ஊழியரின் சாமர்த்தியத்தால் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் பெரும் விபத்திலிருந்துதப்பியது.
ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு இரு புறமும் மூன்று வழி தண்டவாளப் பாதைஅமைக்கப்பட்டுள்ளது.நேற்று அதிகாலை 2.45 மணியளவில் நடுவில் உள்ள தண்டவாளத்தில் சென்னைக்கு நெல்லை எக்ஸ்பிரஸ்சென்றது. ரயில் நிலையத்தில் இருந்த 500 அடி தூரம் சென்று போது திடீரென எதன் மீதோ ரயில் மோதி பெரும்என்று சத்தம் கேட்டது.
ஆனாலும் டிரைவர் ரயிலை நிறுத்தால் சென்றுவிட்டார். சத்தம் கேட்டதும் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தகேங்மேன் சுப்பையா ஒடி வந்தார். அதற்குள் சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் அங்கு வந்தது. எதிரேவந்த பாண்டியன் எக்ஸ்பிரசுக்கு வழிவிட்டு ஸ்ரீரங்கத்திலேயே அனந்தபுரி எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது.
சத்தம் கேட்ட இடத்துக்கு கேங்மேன் வந்து பார்த்தபோது. நெல்லை எக்ஸ்பிரஸ் சென்ற தண்டவாளத்தில் 2 அடிஉயர பாறாங்கல் ஒன்று கிடந்தது.
அந்த தண்டவாளத்தில் தான் பாண்டியன் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்தகேங்மேன், அவசர அவசரமாக அந்தக் கல்லை தூக்கி அருகில் இருந்த புதருக்குள் போட்டார். கேங்மேனின்சாமர்த்தியத்தால் விபத்தில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் தப்பியது.












Click it and Unblock the Notifications