குடிசைக்குள் பாய்ந்த பஸ்; மாடு பலி!
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோடு அருகே அரசுப் பேருந்து தாறுமாறாக ஓடிய சாலையோரம் இருந்த குடிசைவீட்டுக்குள் பாய்ந்தது. இதில் வீட்டு முன்பு படுத்திருந்த எருமை மாடு பரிதாபமாகபலியானது.
ஈரோட்டிலிருந்து பள்ளிப்பாளையத்திற்கு அரசுப் பேருந்து கிளம்பியது. பேருந்துகருங்கல்பாளையம் சோதனைச் சாவடி அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டைஇழந்து தாறுமாறாக ஓடியது.பின்னர் சாலையின் ஓரம் இருந்த ராமலிங்கம் என்பவரின் குடிசை வீட்டுக்குள் புகுந்துநின்றது. இதில் வீட்டின் முன்புறம் கட்டப்பட்டிருந்த 2 எருமை மாடுகள் மீது பேருந்துஏறியது.
அதில் ஒரு மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது. இன்னொரு மாட்டின் 2 கால்கள்உடைந்தன. அந்த மாட்டை கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு போய்சேர்த்தனர்.
வீட்டில் ராமலிங்கம் அவரது குடும்பத்தினரும் அப்போது இல்லை. இதனால்அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.












Click it and Unblock the Notifications