அமரர் வாகனம் மோதி பழ வியாபாரி பலி
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே இறந்தவர் உடலை ஏற்றி வந்த அமரர் வாகனம் மோதிகொய்யாப்பழம் விற்றுக் கொண்டிருந்த வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
சேலம் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் மரணமடைந்தார்.இதையடுத்து அவரது உடலை அமரர் வாகனத்தில் ஏற்றி ராசிபுரம் கொண்டுசென்றனர்.வேன் விழுப்புரம் அருகே உள்ள பேரங்கியூர் என்ற இடத்தில் வந்தபோது,சாலையோரம் கொய்யாப்பழம் விற்றுக் கொண்டிருந்த கரடிப்பாக்கத்தைச் சேர்ந்ததனக்கோடி என்பவர் மீது திடீரென மோதியது.
இதில் பலத்த காயமடைந்த தனக்கோடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.போலீஸார் விரைந்து வேனை ஓட்டி வந்த ஓட்டுவர் ராஜாவைக் கைது செய்தனர்.பின்னர் வேறு ஒரு ஓட்டுவரை வைத்து இறந்தவரின் உடலை ராசிபுரத்திற்குக்கொண்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications