புத்தர்: போதி மரத்தை வெட்டி கும்பல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

புத்த மதத்தினர் புனிதமாக கருதும் போதி மரம் வெட்டப்பட்டதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்தஉத்தரவிடப்பட்டுள்ளது.

Bothi tree with scar
பீகார் மாநிலம் புத்த கயாவில் போதி மரம் உள்ளது. இது புத்தர் ஞானோதயம் பெற்ற போதி மரத்தின் 6ம்தலைமுறை மரமாகும். இந்த மரம் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது.

இந்த மரத்தைச் சுற்றிலும் கோவில் கட்டப்பட்டுள்ளது. அக்கோவில் மகாபோதி கோவில் எனஅழைக்கப்படுகிறது. இந்த இடம் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரியச் சின்னமாகவும்அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

புத்த கயா கோவில் அறக்கட்டளை இந்த கோவிலையும், மரத்தையும் பராமரித்து வருகிறது. சமீபத்தில் இந்தபோதி மரத்தின் ஒரு கிளையை யாரோ விஷமிகள் வெட்டிவிட்டனர்.

இது பெளத்த மதத்தினரிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ஒரு மத்தியக் குழு புத்த கயாவிற்குஅனுப்பப்பட்டுள்ளது.

போதி மரம் சேதப்படுத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும். தொடர்பான செய்திகள் கி.பி. 2வது நூற்றாண்டில்,மன்னர் சஷாங்க், போதி மரத்தை இரண்டாக வெட்டுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து மரம் வெட்டப்பட்டது.

இருப்பினும் மரத்தின் வேரைப் பிரித்து அதே இடத்தில் மரம் மீண்டும் நடப்பட்டு வளர்க்கப்பட்டது. அதே போல6 முறை இந்த மரம் வேர்களின் உதவியால் மீண்டும் மீண்டும் வளர்க்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+