மும்பை குண்டு வெடிப்பு: 3 முக்கிய குற்றவாளிகள் சிக்கினர்

Subscribe to Oneindia Tamil

பாட்னா:

மும்பை ரயில் குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் 2 பேர் பிகாரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவன் மகாராஷ்டிரத்தில் கைது செய்யப்பட்டான்.

இன்டெலிஜென்ஸ் பீரோ மற்றும் மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்பு போலீசார் இணைந்து நடத்திய ரெய்டில்இவர்கள் சிக்கினர். பிகாரில் சிக்கிய இருவரும் சிறப்பு விமானத்தில் மும்பைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பு தொடர்பாக நூற்றுக்கணக்கானவர்களைப் பிடித்து விசாரித்தும் எந்தவிதமான துப்பும்கிடைக்காமல் தடுமாறி வந்தனர் போலீசார். ஒருவழியாக குற்றவாளிகளை அடையாளம் கண்ட போலீசார் அதில்இருவரது படங்களைக் கைப்பற்றி வெளியிட்டனர்.

இவர்களைப் பற்றி தகவல் கொடுத்தால் ரூ. 25 லட்சம் தரப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந் நிலையில் இந்த வழக்கில் முக்கியத் திருப்பமாக இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிகாரின் புத்த கயா பகுதியில் ஒரு கிராமத்தில் முகம்மத் கலாம், முகம்மத் கலீல் ஆகியோர் சிக்கினர்.

அதே போல நவி மும்பை பகுதியில் நடத்தப்பட்ட ரெய்டில் மும்தாஜ் என்பவரும் சிக்கினார்.

இந் நிலையில் இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய மேலும் இருவரது புகைப்படங்களை மகாராஷ்டிரரயில்வே போலீசார் வெளியிட்டுள்ளனர். பல ரயில் நிலையங்களிலும் இந்தப் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஆதாரம் கேட்கும் முஷாரப்:

இதற்கிடையே பாகிஸ்தான் தொலைக்காட்சியில் உரையாற்றி அந் நாட்டு அதிபர் முஷாரப்,

மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இரு நாடுகளிடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையைநிறுத்த இந்தியா முடிவு செய்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது தீவிரவாதிகளுக்கு கிடைத்தவெற்றியாகும்.

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கி வைப்பது என்பது, தீவிரவாதிகளுக்கு பலம் சேர்ப்பதாக அமையும்.அவர்களது கையில் இரு நாடுகளும் சிக்கி பந்தாடப்படும் நிலை உருவாகும்.

இப்படி ஒரு நிலை ஏற்பட வேண்டும் என்றுதான் தீவிரவாதிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அமைதிஏற்படக் கூடாது, அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெறக் கூடாது என்றுதான் அவர்கள் விரும்புகிறார்கள்.அதற்கு இடம் கொடுப்பது போல இந்தியாவின் முடிவு அமைந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.அமைதிப் பேச்சுவார்த்தை தடைபடுவதை இந்திய அரசு விரும்பாது என்று நான் நம்புகிறேன்.

ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வது என்பது தீவிரவாதத்திற்கான எதிரான இரு நாடுகளின் போருக்குக்கிடைத்த முதல் தோல்வியாகவே கருதப்படும். இந்தியாவில் நடக்கும் தீவிரவாத சம்பங்களுக்கு பாகிஸ்தானைகுறை கூறுவது பலவீனத்தையே காட்டும்.

எந்த ஒரு அறிக்கையையும், கருத்துக்களையும் வெளியிடும் முன்பு அதன் பிரதிபலிப்பு குறித்தும் யோசிக்கவேண்டும். மும்பையில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல்களை பாகிஸ்தான் கண்டித்துள்ளது. மும்பை மக்களுக்குநான் சொல்ல விரும்புவதெல்லாம், உங்களது துயரங்களில் நாங்கள் பங்கு கொள்கிறோம். அப்பாவி உயிர்கள்பலியானதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம். பாகிஸ்தான் அரசும், நானும், பாகிஸ்தான் மக்களும் இந்த கொடூரசம்பவத்தை கடுமையாக கண்டிக்கிறோம்.

மும்பை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது. சரியானஆதாரத்தை எங்களிடம் கொடுததால் நிச்சயம் விசாரணைக்கு பாகிஸ்தான் ஒத்துழைக்கும்.

அல் கொய்தா அமைப்பை பலவீனப்படுத்த பாகிஸ்தான் அரசு முயற்சித்து வருகிறது. தேசிய பாதுகாப்பும் இதில்அடங்கியுள்ளதால் இந்த விஷயத்தை நாங்கள் சீரியஸாக எடுத்துள்ளோம் என்றார் முஷாரப்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+