சரத்குமார் மோசடி செய்ததாக தெரியவில்லை: கமிஷனர்
சென்னை:
இரும்பு வியாபாரி சுபோத்குமாரிடம் நடிகர் சரத்குமார் பண மோசடி செய்ததாக கூற முடியாது, அப்படித்தெரியவில்லை என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் கூறியுள்ளார்.
![]() |
இந்தப் பணத்தை நடிகை நக்மாவுக்காகத்தான் வாங்கினேன், முடிந்தால் அங்கே போய் வாங்கிக் கொள்ளுங்கள்என்று சரத்குமார் தன்னிடம் கூறியதாகவும், சுபோத்குமார் கூறியுள்ளார்.
சுபோத்குமாரின் இந்த புகார் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை சட்டப்பூர்வமாக சந்தித்து வெற்றிபெறுவேன் என்று சரத்குமார் கூறியுள்ளார். இந்த நிலையில் சுபோத்குமார் புகார் மனு எந்த நிலையில் இருக்கிறதுஎன்று ஆணையர் லத்திகா சரணிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, நடிகர் சரத்குமார் மீது கொடுக்கப்பட்டபுகாரை விசாரித்தோம்.
1996ம் ஆண்டு பணம் வாங்கப்பட்டுள்ளது. இதற்காக 2 பிராமிசரி நோட்டுக்கள் எழுதி பெறப்பட்டுள்ளது. இதுசிவில் பண பரிவர்த்தனை ஆகும். இதுவரை நடந்த விசாரணையை வைத்துப் பார்க்கும்போது சரத்குமார் மோசடிசெய்திருப்பதாக கூற முடியாது.
பணத்தைத் திருப்பித் தந்திருப்பதாக சரத்குமார் கூறியுள்ளார். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு நிறைய காதல் ஜோடிகள் அடைக்கலம் புகுகிறார்கள்.
![]() |
திருமண வயதை எட்டிய பின்னர், முறையாகவும், சட்டப்பூர்வமாகவும் திருமணம் செய்வதை குற்றம் என்றுசொல்ல முடியாது. அதை நாங்களும் தடுக்க முடியாது. திருமணம் என்பது நல்ல, குடும்ப விசேஷம். இதைபெற்றோர்களும், சம்பந்தப்பட்ட காதலர்களும் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது என்றார் லத்திகா சரண்.














Click it and Unblock the Notifications