பெண்ணாகரத்தில் நில அதிர்ச்ச்சி
Subscribe to Oneindia Tamil
பெண்ணாகரம்:
தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் வியாழக்கிழமை பிற்பகலில் லேசானநில அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் மக்களிடையே பீதி ஏற்பட்டது.
இந்தோனேசிய பூகம்பத்தைச் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டு வருகிறது.மேற்கு வங்கத்தில லேசான நில அதிர்ச்சி காணப்பட்டது. இந்த நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் இரண்டேகால் மணிக்கு பெண்ணாகரம் மற்றும் அதன் சுற்றுப் புற கிராமங்களில் லேசான நில அதிர்ச்சி ஏற்பட்டது.நெருப்பூர் என்ற கிராமத்தில் நில அதிர்ச்சியை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். சில விநாடிகள் பூமிகுலுங்கியதாகவும், பெரும் சப்தம் கேட்டதாகவும் மக்கள் கூறியுள்ளனர். கிட்டத்தட்ட 15 விநாடிகள் இதுநீடித்ததாக தெரிகிறது. பொருட்கள் ஆடின.
இந்த நில அதிர்ச்சியால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. நில அதிர்வுக் கருவியில் இது பதிவாகவில்லை என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications