For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் மீண்டும் வெடிகுண்டு புரளி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

டெல்லி செங்கோட்டை மற்றும் இந்தியா கேட்டில் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் முக்கிய நகரங்களில்வெடிகுண்டு புரளிகள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் இந்தியா கேட்டில் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக அடுத்தடுத்து 2 நாட்களுக்கு புரளி கிளம்பியது.

இந்த நிலையில் இன்று பிற்பகல் செங்கோட்டை மற்றும் இந்தியா கேட்டில்வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக இரண்டு முறை வதந்தி கிளம்பியது.

முதலில் பிற்பகல் 12.02 மணிக்கு இந்தியா கேட்டில் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசித் தகவல் வந்தது. இதையடுத்து அங்குபோலீஸார் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

இந் நிலையில் 12.22 மணிக்கு செங்கோட்டையில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாகபோலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கும் போலீஸ் படை அனுப்பப்பபட்டுசோதனை நடந்தது.

செங்கோட்டை பகுதியில் இருந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டு மக்கள்அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். மோப்ப நாய்களுடன் வெடிகுண்டுநிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் குண்டு எதுவும்சிக்கவில்லை.

செங்கோட்டையில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலால் அருகில் உள்ளமக்கள் நெரிசல் அதிகம் மிக்க சாந்தினி செளக் பகுதியில் பெரும் பதட்டம்காணப்பட்டது.

குண்டு வெடிப்பு: டாக்டர் கைதுஇந் நிலையில் மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக மேலும் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 21ம் தேதி 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந் நிலையில் மேலும் 3 பேர்பிடிபட்டுள்ளனர். மும்பையில் வசிக்கும் தன்வீர் அன்சாரி என்பவரை குற்றபிரிவுபோலீசார் கைது செய்தனர். அவர் யுனானி டாக்டர் ஆவார்.

அவரை குற்றப் பிரிவு போலீசார் தீவிரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

இவர் பாகிஸ்தானுக்கு சென்று ஆயுதங்களை கையாளுதல், வெடிகுண்டுகளைஇயக்குதல் குறித்து பயிற்சி பெற்று வந்து இருக்கிறார். அந்த பயிற்சியை அவர்மற்றவர்களுக்கு சொல்லி கொடுத்து இருப்பதாக தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார்தெரிவித்துள்ளனர்.

லஸ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் தீவிரவாதியாக இருந்து கொண்டு டாக்டர்தொழிலையும் செய்து வந்து இருக்கிறார். இதே போல் மாரட்டிய மாநிலம் சோலாப்பூர்பகுதியில் ஒருவனும், கோண்ட்வா பகுதியில் மற்றொருவனும் பிடிபட்டுள்ளனர்.

விசாரணை தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் ஏஎன்.ராய் கூறியதாவது,

மும்பை குண்டு வெடிப்பு விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.விரைவில் மேலும் சிலர் கைதாவார்கள். குண்டு வைத்தவர்களையோ சதி திட்டம்தீட்டியவர்களையோ நாங்கள் இன்னும் பிடிக்கவில்லை.

விசாரணை நடைபெற்று வருவதால் மேற்கொண்டு எதுவும் சொல்ல இயலாது எனஅவர் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X