முத்துசெல்வியை கடத்துவோம் என மிரட்டினோம்
நாகர்கோவில்:
முத்துச்செல்வியை செல்போனில் படம் பிடிக்கவில்லை. கடத்திச் சென்று விடுவோம்என்றுதான் மிரட்டினோம் என முத்துசெல்வி தற்கொலை செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட வாலிபர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
![]() |
அவரை செல்போனில் ஆபாச படம் பிடித்துள்ளதாக ஒரு கும்பல் மிரட்டியது. அதற்குபயந்து, முத்துசெல்வி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நாகர்கோவில்பகுதிகளில் ராதாபுரம் போலீசார் முகாமிட்டு விசாரித்தனர்.
போலீஸ் விசாரணையில் முத்துசெல்வுயும் வேலு என்ற வாலிபரும் காதலித்து வந்ததுதெரிந்தது. வேலுவை விசாரிக்க சென்ற போது, முத்துசெல்வி தற்கொலை செய்தமறுநாளே அவரும் தற்கொலை செய்து கொண்டார்.
இதன்பின் முத்துசெல்வியை மிரட்டியவர்களை பிடிக்க போலீஸ் விசாரணைதீவிரமடைந்தது. இறுதியாக நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்களை கைது செய்தனர்.அவர்களில் ஒருவர் பெயர் சங்கர் (22), வெட்டூர்ணிமடத்தை சேர்ந்தவர்.
மற்றொருவர் ஜோன்ஸ் (20), டுடோரியல் ஒன்றில் இவர் படித்து வருகிறார். இவர்கள்இருவரும் வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டைசிறையில் அடைக்கப்பட்டனர்.
![]() |
இந்த வழக்கு குறித்து போலீசில் ஜோன்சும், சங்கரும் வாக்குமூலத்தில்கூறியுள்ளதாவது,
முத்துசெல்வி நல்ல அழகி, நல்ல சிகப்பு, சினமா நடிகைபோல் இருப்பார். இதனால்முத்தசெல்வியின் அழகில் நாங்கள் மயங்கினோம். அவரை காதலிக்க நாங்களும்,எங்களின் மற்றொரு நண்பன் சுரேசும் போட்டி போட்டோம்.
முத்துசெல்வி பள்ளிக்கு செல்லும் போதும், விடுதிக்கு திரும்பும் போதும் நாங்கள் பின்தொடர்வோம். பின்னர் முத்துசெல்வியை சுரேஷ் மிகவும் விரும்பியதால் நாங்கள்அவனுக்கு உதவ முடிவு செய்தோம்.
முத்துசெல்வியிடம் சுரேஷ் தனது காதலை பலமுறை கூறினான் ஆனால் முத்துசெல்விஅதை ஏற்கவில்லை. பிறகு முத்துசெல்வி வேலு என்ற வாலிபருரை காதலிப்பதாகஅறிந்தோம்.
இதானல் நாங்கள் வேலுவை மிரட்டினோம். ஆனால் அவர் பயப்படவில்லை. எனவேநீங்கள் இரண்டு பேரும் நெருக்கமாக இருக்கும் போது செல்போனில் படம் பிடித்துவிட்டோம். அந்த ஆபாட படத்தை வெளியிட்டு உங்களை அவமானப்படுத்திவிடுவோம் என மிரட்டினோம்.
ஆனால் நாங்கள் உண்மையில் அவர்களை படம் பிடிக்கவில்லை. சும்மா பேச்சுக்காகதான் மிரட்டினோம். இந் நிலையில் ஒருநாள் முத்துசெல்வியை மடக்கி, உன்னைகடத்தி சென்று விடுவோம் என்று மிரட்டினோம்.
அதன் பிறகுதான் முத்துசெல்வி தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தோம் எனஅவர்கள் வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.














Click it and Unblock the Notifications