For Daily Alerts
Just In
பண மோசடி: 288 ஆண்டு சிறை தண்டனை!
வானூர்:
விழுப்புரம் மாவட்டம் வானூரைச் சேர்ந்த கூட்டுறவுச் சங்க செயலாளருக்கு பணமோசடி தொடர்பாக தொடரப்பட்ட 48 வழக்குகளில் மொத்தமாக 288 ஆண்டுசிறைத்தண்டனை விதித்து வானூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
கூட்டுறவு சங்கம் ஒன்றில் செயலாளராக பணியாற்றி வந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர்பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து விட்டதாக 48 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.இந்த வழக்குகள் வானூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன. விசாரணைமுடிந்துநீதிபதி வையாபுரி தீர்ப்பு வழங்கினார்.
48 வழக்குகளிலும் கிருஷ்ணமூர்த்தி மீதான புகார்கள் ஆதாரத்துடன்நிரூபிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு வழக்கிலும் தலா 6 ஆண்டுகள் என மொத்தம்288 வருடம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Comments
Story first published: Friday, July 28, 2006, 5:30 [IST]