நாளை நடிகர் சங்கத் தேர்தல்: போலீஸ் துணை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பரபரப்பான சூழ்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் நாளைநடைபெறுகிறது

நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு சரத்குமார் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.மற்ற நிர்வாகிகளுக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. நடிகர் சங்க வளாகத்தில்காலை 8 மணிக்கு இதற்கான வாக்குப் பதிவு தொடங்குகிறது.

திரைப்பட நடிகர், நடிகையர், நாடக நடிகர்கள் உள்ளிட்ட 1,928 பேர் ஓட்டுப்போடவுள்ளனர். மாலை 6 மணிக்கு ஓட்டுப் பதிவு முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டுஉடனே முடிவுகள் அறிவிக்கப்படும்.

மோதல் ஏற்படக்கூடிய சூழல் இருப்பதால் பலத்த பாதுகாப்புடன் தேர்தல்நடைபெறவுள்ளது. பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவி, மன்சூர் அலிகான்ஆகியோரும், துணைத் தலைவர் பதவிக்கு விஜயக்குமார், மனோரமாஉள்ளிட்டோரும், பொருளாளர் பதவிக்கு கே.என்.காளை, நல்லதம்பி ஆகியோரும்போட்டியிடுவதால் பரபரப்பு நிலவுகிறது.

இதுதவிர 24 உறுப்பினர் கொண்ட செயற்குழு உறுப்பினர் பதவிக்கு சிம்பு, அப்பாஸ்,முரளி, சத்யராஜ், ஸ்ரீகாந்த், செந்தில், விந்தியா, மும்தாஜ், குண்டு கல்யாணம்உள்ளிட்ட 46 பேர் போட்டியில்உள்ளனர்.

சரத்குமார் அணிக்கு தற்போதைய தலைவர் விஜயகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.சரத்குமார் அணியினருக்கே வாக்களியுங்கள் என்று கோரி நடிகர், நடிகையருக்கு அவர்கடிதமும் அனுப்பியுள்ளார்.

இந் நிலையில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த நியமிக்கப்பட்டிருக்கும் தேர்தல் அதிகாரி ராஜாமணியை எதிர்த்து நடிகர் குமரி முத்து சென்னை நகர சிவில் நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்துள்ளார். ராஜாமணி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தபால் ஓட்டுக்களில் பெருமளவில்முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே இவர் தேர்தலை நடத்தக் கூடாது. தனியாக அட்வகேட் கமிஷனர் நியமிக்கப்பட்டு அவர் மூலம்தான் தேர்தலை நடத்தவேண்டும் என்று கோரியுள்ளார் குமரிமுத்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+