திருமணமான டாக்டரை துரத்தும் நர்ஸ்!
சென்னை:
மனைவியை விவாகரத்து செய்து விட்டு தன்னை கல்யாணம் செய்து கொள்ளுமாறுகூறி கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் விரட்டி விரட்டி தொல்லை கொடுப்பதாக சென்னைடாக்டர் ஒருவர் போலீஸில் புகார் கொடுததுள்ளார்.
சென்னை வடபழனி விஜயா மருத்துவமனையில் பணியாற்றுபவர் டாக்டர்விஜயக்குமார். இவரது மனைவியும் டாக்டர்தான். அவர் வேறு ஒருமருத்துவமனையில் டாக்டராக உள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர்.இந் நிலையில் டாக்டர்விஜயக்குமார் வடபழனி காவல் நிலையத்தில் ஒரு புகார்கொடுத்துள்ளார்.
அதில், மனைவி, குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன். 5ஆண்டுகளுக்கு முன்பு நான் வேலை பார்த்த மருத்துவமனையில் கேரளாவைச் சேர்ந்தபிரின்ஸஸ் பெஞ்சமின் என்ற நர்ஸ் என்னைக் காதலிப்பதாகக் கூறினார்.
எனக்கு கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. நானும் உன்னைக்காதலிக்கவில்லை. எனவே வேறு யாரையாவது கல்யாணம் செய்து கொள் என்றுஅவருக்கு அறிவுரை கூறினேன்.
ஆனால் அவர் தொடர்ந்து என்னைக் காதலிப்பதாகக் கூறி வந்தார். இந் நிலையில்அவருக்கு லண்டனில் வேலை கிடைத்து அங்கு போய் விட்டார். இதனால் நான்நிமமதி அடைந்தேன்.
ஆனால் அங்கு போயும் விடாமல், எனக்கு இமெயில் மூலமும், செல்போன் மூலமும்தொடர்ந்து தொல்லை தந்து வந்தார். என்னைக் கல்யாணம் செயது கொள் என்று கூறிதொந்தரவு செய்ய ஆரம்பித்தார்.
இந் நிலையில் திடீரென அவர் சென்னைககு வந்துள்ளார். நேராக மருத்துவமனைக்குவந்த அவர் எனனைக் கல்யாணம் செய்து கொண்டே ஆக வேண்டும். மனைவியைவிவாகரத்து செய்து விட்டு வாருங்கள், நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்றுதொந்தரவு செய்து வருகிறார்.
அவர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு நிம்மதியைத் தாருங்கள் என்று தனது புகாரில்கூறியுள்ளா டாக்டர் விஜயக்குமார்.
நர்ஸ் பிரின்ஸஸ் வடபழனியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருப்பதாகபோலீஸாரிடம் டாக்டர் விஜயக்குமார் தெரிவித்ததால், போலீஸார் விசாரணைநடத்துவதற்காக அங்கே சென்றனர்.
ஆனால் போலீஸார் வருவதை அறிந்த பிரின்ஸஸ் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து எப்படி நடவடிக்கை என்ற குழப்பத்தில் போலீஸார்மூழ்கியுள்ளனர்.
நர்ஸை கண்டுபிடித்து அவருக்கு உளவியல் ஆலோசனைகள் கொடுக்க போலீஸார்முடிவு செய்துளளனர்.












Click it and Unblock the Notifications