மும்பை குண்டுவெடிப்பு: புலனாய்வு தகவல்களைபரிமாறிக் கொள்ள இந்தியா- பாக். முடிவு
டாக்கா:
மும்பை வெடிகுண்டு சம்பவம் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை பகிர்ந்துகொள்வது என இந்தியாவும், பாகிஸ்தானும்முடிவு செய்துள்ளன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் வெளியுறவு செயலாளர் மட்டத்திலானமாநாடு வங்கதேச தலைநகர் டாக்காவில் இன்று தொடங்கியது. இந்திய வெளியுறவுசெயலாளர் ஷியாம் சரணும், பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் ரியாஸ்முகம்மதுகானுனியும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.மாநாட்டின்போது, மும்பை, ஸ்ரீநகர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பானபுலனாய்வுத் தகவல்களை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்வதெனமுடிவெடுக்கப்பட்டது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஷியாம்சரண், வன்முறை, தீவிரவாதசெயல்கள் இல்லாத பின்னணியில்தான் இந்திய, பாகிஸ்தான் அமைதிப்பேச்சுவார்த்தையை தொடர முடியும் என இந்தியா உறுதியாக நம்புகிறது.
இக்கூட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான பல்வேறு பிரச்சினைகள் குறித்துபேசப்படும்.
இந்திய, பாகிஸ்தான் பேச்சுக்கள் நடக்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு பயங்கரவாதசெயல் நடப்பது வழக்கமாகி வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
பாகிஸ்தான் தீவிரவாத்தைக் கட்டுப்படுத்துவதில் சீரியஸாக இருக்கிறது என்பதைநிரூபிக்கும் வகையில் அதன் நடவடிக்கைகள் அமைய வேண்டும என இந்திய மக்கள்கருதுகிறார்கள்.
இந்தக் கருத்தையும் இக்கூட்டத்தின்போது எடுத்து வைப்போம் என்றார் சரண்.
இக்கூட்டம் கடந்த 21ம் தேதியே டெல்லியில் நடந்திருக்க வேண்டும். ஆனால்மும்பை, ஸ்ரீநகரில் நடந்த வெடிகுண்டு சம்பவங்களைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைதள்ளிப் போடப்பட்டு டாக்காவுக்கு மாற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications