காவலர் கையைப் பிடித்து இழுத்ததாக பிரச்சினை கிளப்பிய பதர் சயீத்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபைக் காவலர் தனது கையைப் பிடித்து இழுத்ததாக அதிமுக பெண் உறுப்பினர்பதர் சயீத் கொண்டு வந்த உரிமை மீறல் பிரச்சினையை சபாநாயகர் ஆவுடையப்பன்தள்ளுபடி செய்தார்.

Padar Sayeed
சட்டசபையில் பதர்சயீத் பிரச்சினை ஒன்றை எழுப்பினார்.

அவர் கூறுகையில், கடந்த 31ம் தேதி அதிமுக உறுப்பினர்களை அவையிலிருந்துவெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டபோது, என்னை ஒரு பெண் என்றும்பாராமல் ஒரு காவலர் என் கையைப் பிடித்து வெளியே இழுத்தார்.

இது பெண் உறுப்பினர்களின் கண்ணியத்திற்கு இழுக்கான செயல். இந்த அவையில்உள்ள அனைத்துப் பெண் உறுப்பினர்கள் சார்பிலும் தான் நான் இதனை சொல்கிறேன்.

காவல்துறையை தனது கையில் வைத்திருக்கும் முதல்வர் மீது நான் கொடுத்த உரிமைமீறல் பிரச்சினை எனனவானது எனறு கேட்டார்.

இதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன் பதிலளிக்கையில்,

அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால்தான் அதிமுக உறுப்பினர்களை கடந்த 31ம் தேதி வெளியேற்றுமாறுநான் அவைக் காவலர்களுக்கு உதத்ரவிட்டேன்.

பலமுறை வெளியேறுமாறு நான் கேட்டுக் கொண்டும் அவர்கள் அதை மதிக்காமல்அவையில் உட்கார்ந்து கொண்டே அவைக் காவலர்களின் கடமையை செய்யவிடாமல் தடுக்கும் வகையில் நடந்து கொண்டதால் காவலர்களை அவர்களைவலுக்கட்டாயமாக வெளியேறற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதில் அவை உரிமை மீறல் எதுவும் இல்லை என்று கூறி உரிமை மீறல் பிரச்சினையைதள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+