திருப்பதியில் கிருஸ்துவ மத பிரச்சாரம்: தடுக்க கோவில் நிர்வாகம் முடிவு
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கிருஸ்துவ மதப் பிரச்சாரம் நடப்பதைத் தடுக்கதேவஸ்தானத்தின் சார்பில் தனிப் படைகள் அமைக்கப்படவுள்ளன.
திருப்பதி கோவிலை சுற்றி கிருஸ்துவ மதப் பிரச்சாரம் நடப்பதாகவும், கோவிலின் பல காண்ட்ராக்ட்கள்கேரளத்தைச் சேர்ந்த கிருஸ்துவ நிறுவனங்களுக்குத் தரப்பட்டுள்ளதாதவும், இதற்கு ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டியே காரணம் என்றும் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.ராஜசேகர ரெட்டி, கிருஸ்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் கடந்த வாரம் திருமலையில் பாலாஜி நகரில் உள்ள சில வீட்டுக் கதவுகளில் சிலுவைவரையப்பட்டு, பைபிள் வசனங்களும் எழுதப்பட்டிருந்தன. இதையடுத்து பரபரப்பு அதிகமானது.
இதையடுத்து கோவில் நிர்வாகத்தினருடன் ரெட்டி ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து திருப்பது தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி பலராமய்யா, பாலாஜி நகருக்குச் சென்றார்.அப் பகுதியினரை சந்தித்து. இங்கு வேற்று மதப் பிரச்சாரம் நடந்தால் உடனே அதிகாரிகளுக்குத்தெரியப்படுத்துமாறு கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், திருப்பதி கோவில் பகுதியை சுற்றி பிற மதப் பிரச்சாரம் நடப்பதைதடுக்க தேவஸ்தானத்தின் சார்பில் தனிப்படை அமைக்கப்படும். திருமலையில் வசிப்போர் அனைவரும் திருநாமம்பூசிக் கொள்வது என்று உறுதியளித்துள்ளனர்.
இதனால் பிற மதத்தினரின் நடமாட்டத்தை எளிதில் கண்காணிக்க முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications