ரயில் பாதையில் டின்-வெடிகுண்டு என அச்சம்:நியூயார்க்-நியூஜெர்சி ரயில்கள் நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
ரயில் பாதையில் சந்தேகத்துக்கிடமான பொருள் கிடந்ததால் அமெரிக்காவில் நியூயார்க்-நியூஜெர்சி இடையிலானரயில் போக்குவரத்து அவரசமாக நிறுத்தப்பட்டது.
ஆனால், பாதையில் கிடந்த அந்தப் பொருள், ஒரு எண்ணெய் டின் என்று தெரிய வந்ததையடுத்து ரயில்போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு நீடித்து வருகிறது.
இந் நிலையில் ஹட்சன் ரிவர் டனல் அருகே கிடந்த அந்த டின் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.உடனடியாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர்.
நியூயார்க்கின் பென் ஸ்டேசனில் இருந்தும் நியூவார்க் நகரில் இருந்தும் புறப்படும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. சிலரயில்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன.
ஆனால், சோதனையில் அந்தப் பொருட் ஹைட்ராலிக் எண்ணெய் நிறைந்த ஒரு டின் எனத் தெரியவந்ததால்போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.












Click it and Unblock the Notifications