சென்னை: சிக்குன் குனியாவுக்கு 2 சிறுமிகள் பலி?
சென்னை:
சென்னை தண்டையார்பேட்டையில் சிக்குன் குனியா காய்ச்சலுக்கு 2 சிறுமிகள் பலியாகியுள்ளனர். இதனால் வட சென்னையில்பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் சிக்குன் குனியா காய்ச்சல் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காய்ச்சலுக்குயாரும் பலியாகவில்லை என்று அரசும் நலத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரனும் கூறி வந்தாலும் ஆங்காங்கேசிலர் இறந்தவண்ணம் உள்ளனர்.இந் நிலையில் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரி மற்றும் கலைச்செல்வி ஆகிய இரு சிறுமிகள் சிக்குன்குனியாவுக்குப் பலியாகியுள்ளனர்.
12 வயதான கலைச்செல்வி 7ம் வகுப்பு படித்து வந்தார். 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் வந்தது. இதையடுத்துஅவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நிலைமை மோசமானதால் அவர் ஸ்டான்லி மருத்துவமனைககுகொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் வழியிலேயே கலைச்செல்வி இறந்து போனார். இவருக்கு சிக்குன் குனியா காய்ச்சல் தாக்கியிருக்கலாம் எனசந்தேகிக்கப்படுகிறது.
கலைச்செல்வி மற்றும் ராஜேஸ்வரி ஆகிய இரு சிறுமிகளுக்கும் கடந்த வாரம் ஸ்டான்லி மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனைநிநத்தப்பட்டுள்ளது. அந்த சோதனையில் மர்ம காய்ச்சல் அவர்களைத் தாக்கியிருப்பதாக டாக்டர்கள் சந்தேகித்தனர்.
இருப்பினும் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே இரு சிறுமிகளும் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என அவர்களது பெற்றோர்களும், உறவினர்களும் சந்தேகிக்கின்றனர். இந்த இருசாவுகளால் வட சென்னையில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications