செளதியில் தமிழக கட்டட தொழிலாளி படுகொலை

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி, செளதி அரோபியாவில் படுகொலைசெய்யப்பட்டார்.

Sheik with his family
கொலையான ஷேக் முகம்மது தனது மனைவி, மகள்களுடன்

அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டரிடம் அவரது மனைவி மனுகொடுத்துள்ளார்.

குமரி மாவட்டம் காரியமங்கலத்து விளையைச் சேர்ந்த ஷேக் முகமது (33) இரண்டு வருடங்களுக்கு முன் செளதிஅரேபியா சென்றார். அங்கு அல் கத்தீப் நகரில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

அவருடன் குமரி மாவட்டம் புதுக்கடை பகுதியைச் சேர்ந்த வாலிபர்களும் தங்கியிருந்தனர். இந் நிலையில் கடந்த10ம் தேதி ஷாப்பிங் சென்ட்டரில் ஒரு அறையில் ஷேக் முகமது கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

கொலை நடந்த அன்று அவருடன் தங்கி இருந்த வாலிபர்கள் மாயமாகிவிட்டனர். இந்த கொலை தொடர்பாகசெளதி அரேபியா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஷேக் முகமதுவின் உடல் செளதி அரேபியாவில்உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட ஷேக் முகமதுவுக்கு ஷமீமா பீவி (33) என்ற மனைவியும், அஷிரின் பாத்திமா (7),அர்பினா ஷெரீன் (3) என்ற 2 மகள்களும் உள்ளனர்.

ஷேக் முகமதுவின் உடலை இந்தியா கொண்டு வர உதவுமாறு குமரி மாவட்ட கலெக்டர் சுனீல் பாலிவாலிடம்ஷமீமா மனு கொடுத்துள்ளார்.

ஷேக் முகமதுவை கொலை செய்த, அவருடன் தங்கி இருந்த வாலிபர்கள் போலி பாஸ்போர்ட் மூலம்இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளதாகத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+