சென்னை, மதுரையில் 2500 ஏக்கர் பரப்பளவில் துணை நகரங்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் நடப்பாண்டில் 2500 ஏக்கர் பரப்பளவில் துணை நகரங்களைஉருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் சுப.தங்கவேலன்தெரிவித்துள்ளார்.
சட்டசபையில், வீட்டு வளர்ச்சி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையை சமர்ப்பித்து தங்கவேலன்பேசுகையில், சென்னை அருகே 7000 ஏக்கர் பரப்பளவில் துணை நகரத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.முதல்கட்டமாக நடப்பாண்டில் ரூ. 500கோடி மதிப்பில் 1500 ஏக்கர் நிலத்தில் துணை நகரம் உருவாக்கப்படும்.இந்த துணை நகரத்தில், வணிக வளாகங்கள், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், சமூக கூடங்கள், பூங்காக்கள்,விளையாட்டுத்திடல்கள் மற்றும் வருவாய் ஈட்டும் அமைப்புகள் உள்ளிட்டவை இடம் பெறும்.
இதே போல மதுரை, கோவை ஆகிய நகரங்களிலும் துணை நகரங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.நடப்பாண்டில் மதுரையில் 1000 ஏக்கர் பரப்பளவில் துணை நகரம் உருவாக்கப்படும் என்றார் தங்கவேலன்.












Click it and Unblock the Notifications