ஐயப்பன் கோவில்: கேரளஅரசு புதிய முடிவு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 15 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களையும் அனுமதிக்கலாம்.அந்த முடிவை கேரள அரசு எதிர்க்காது என்று அம்மாநில அறநிலையத்துறை அமைச்சர் சுதாகரன்தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களையும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி இந்திய இளம்வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சபர்வால் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கேரள அரசு, திருவாங்கூர் தேவஸம் போர்டு, கேரளமாநிலஅறநிலையத்துறை ஆணையர், சபரிமலை தலைமை தந்திரி, பத்தனம்திட்டா மாவட்ட மாஜிஸ்திரேட்ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நோட்டீஸ் குறித்து மாநில அறநிலையத்துறை அமைச்சர் சுதகாரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பெண்களை சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க கேரள அரசு எதிர்க்கவில்லை. இதே பதிலைத்தான்உச்சநீதிமன்றத்திற்கும் தரவுள்ளோம்.

இடதுசாரி கூட்டணி அரசு சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டது. பாலின பாகுபாட்டை நாங்கள் எதிர்க்கிறோம்.இருப்பினும் சபரிமலை கோவிலின் நடவடிக்கைகளில் நாங்கள் தலையிட மாட்டோம். அதுதொடர்பானசர்ச்சைகளிலும் நாங்கள் தலையிட மாட்டோம் என்றார்.

அமைச்சரின் கருத்து குறித்து திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ராமன் நாயர் கூறுகையில்,ஒவ்வொருவருக்கும் ஒருகருத்து உண்டு. அமைச்சர் தனது கருத்தைக் கூறியுள்ளார்.

ஆனால் சபரிமலை ஐயப்பன் கோவிலில கடைப்பிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய பழக்கங்கள், நடைமுறைகள்மிகவும் பழமையானவை, தேவசம் போர்டு தொடங்குவதற்கு முன்பே பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தபழக்க வழக்கங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறிதது உச்சநீதிமன்றத்தில் விரிவாக எடுத்துரைப்போம் என்றார் ராமன் நாயர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+