பி.இ. கவுன்சிலிங் முடிந்தது: 16,875 சீட்டுகள் காலி!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக பி.இ. கவுன்சிலிங் நேற்றுடன் முடிவடைந்தது.கவுன்சிலிங்கின் இறுதியில், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசுஒதுக்கீட்டின் கீழ் 16,875 சீட்டுகளில் மாணவர்கள் யாரும் சேரவில்லை.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய கவுன்சிலிங்கிற்கு மொத்தம் 64,356 மாணவ,மாணவியர் அழைக்கப்பட்டனர். இவர்களில் 40,937 பேர் மட்டுமே வந்திருந்தனர்.22,932 பேர் வரவில்லை. 477 பேர் கவுன்சிலிங்கிற்கு வந்து விட்டு எந்த படிப்பையும்தேர்ந்தெடுக்காமல் சென்று விட்டனர்.கவுன்சிலிங்கில் கலந்து கொண்ட 10 பேர் தொழில் நுட்பக் காரணத்தால்நிராகரிக்கப்பட்டனர். கவுன்சிலிங்கின் இறுதியில் 16,875 சீட்டுகள் காலியாக உளளன.இவை தனியார் சுய நிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் சீட்டுகள் ஆகும்.அரசு உதவி பெறும் கல்லூரியில் ஒரே ஒரு இடம் காலியாக உள்ளது.
இந்த ஆண்டும் இசிஇ, சிஎஸ்இ, ஐடி ஆகிய படிப்புகளுக்கே மாணவர்களிடம் அதிகமோகம் காணப்பட்டது. மாறாக சிவில் பிரிவுக்கு 1223 பேரும், மெக்கானிக்கல்பிரிவில் 3632 பேரும் மட்டுமே சேர்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications