அந்தமானில் ஐ.எஸ்.ஐ. ஊடுறுவல்-பாஜக புகார்
போர்ட்பிளேர்:
அந்தமான், நிக்கோபார் தீவுகளில் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐஊடுருவியுள்ளதாக அந்தமான் பாஜக தலைவர் பிஷ்னு பாத ராய் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், அந்தமான், நிக்கோபார் தீவுகளில் வங்கதேசததவர் அதிகஅளவில் ஊடுறு வருகின்றனர். சமீபத்தில் அந்தமானில் 40 வங்கதேசத்தினர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுக்கு பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.க்கும்தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் ஐ.எஸ்.ஐ. செயலபாடுகள் அந்தமானில் வலுவடைந்து வருவதுஉறுதியாகியுள்ளது.
சரியான ஆவணங்கள் இல்லாமல் அந்தமான், நிக்கோபர் தீவுகளில் வங்கதேசத்தினர்ஊடுறுவி வருகின்றனர். இப்போதுதான் அவர்களை சோதிக்க அரசு நடவடிக்கைஎடுத்து வருகிறது. ஆனால் இதறகு முன்பு அவர்கள மிக சுதந்திரமாக இங்கு நுழைந்துவந்தனர் என்றார் ராய்.
கொல்கத்தாவில் ஏஜென்டுகளிடம் தலா ரூ.1.5 லட்சம் வரை பணம் கொடுத்துஅவர்களது உதவியுடன் அந்தமான் தீவுகளுக்குள் வங்கதேசத்தினர் சட்டவிரோதாககுடியேறி வருகின்றனர்.
பெரும்பாலும் வேலை தேடியே இவர்கள் வருகின்றனர் என்று போலீசார் கூறினாலும்பாஜக அதை மறுக்கிறது.
இதுகுறித்து ராய் கூறுகையில், வேலைதேடி வரும் ஒரு நபரால் எப்படி ரூ.15 லட்சம்வரை பணம் கொடுக்க முடியும்? அதுவும் இந்தத் தீவில் அவர்களுக்கு என்ன வேலைகிடைத்து விட முடியும்? இங்கு செலவும் அதிகம். சாதாரண வேலை செய்பவரால்இங்கு வாழ்க்கை நடத்துவது மிகவும் கடினம்.
அந்தமான் தீவுகளில் வங்கதேசத்தவர்களை ஊடுறுவ வைத்து தனது சதித் திட்டங்களைநிறைவேற்ற ஐ.எஸ்.ஐ. திட்டம் தீட்டி வருவதாகவே நாங்கள் நினைக்கிறோம்.
மேலும், இங்கு பயிற்சி முகாம்களை நிறுவ தீவிரவாதகிள் திட்டமிடடு வருகின்றனர்.அந்தமான், நிக்கோபர் தீவுகளில் யாரும் வசிக்காத 572 தீவுகளை கைப்பற்றி அங்குசதி வேலைகளில் ஈடுபடுவதே அவர்களது திட்டம் என்று கூறியுள்ளார் ராய்.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து அந்தமான், நிககோபர் தீவுகளில் பாதுகாப்பைபலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக குடியேறியுளளவெளிநாட்டவர்கள் வெளியேற்றப்படடு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications