காதலனுடன் ஓடிய மகளுக்கு ஈமக்கிரியை
திருச்சி:
காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மகள் இறந்து விட்டதாக கூறி அவருக்குஈமக்கிரியை நடக்கவிருப்பதாக அவரது தந்தை போஸ்டர் அடித்து ஒட்டியதால்திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் மாயவனூரைச் சேர்ந்தவர் செளந்தரராஜன். இவரது மகள் தீபா. அதேபகுதியைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் நாகராஜனின் மகன் புவனேஸ்வரன். 8ம்வகுப்பு படித்துள்ள புவனேஸ்வரனும், திருச்சி கல்லூரியில் பி.காம் படித்து வரும்தீபாவும் காதலித்து வந்தனர்.இதை அறிந்த செளந்தரராஜன், தீபாவை திருச்செங்கோட்டில உள்ள உறவினர்வீட்டுக்கு அனுப்பி வைத்தார். காதலனை மறக்க முடியாத தீபா, புவனேஸ்வரனுக்குகடிதம் எழுதி தனினை மீட்டுச் செல்லுமாறு கோரினார்.
அந்தக் கடிதத்தை புவனேஸ்வரன் ஜெராக்ஸ எடுத்து மாவட்ட ஆட்சித் தலைவர்,காவல்துறை கண்காணிபபாளர் ஆகியோருக்கு அனுப்பினார்.
இதையடுத்து தீபா மற்றும் அவரது பெற்றோரை மாவட்ட எஸ்.பி. அழைத்துப்பேசினார். அப்போது, காதலனை மறந்து விட்டு பெற்றோருடன் செல்கிறேன் என்றுதீபா கூறியுள்ளார். இதையடுத்து தனது பெற்றோர் வீட்டுக்குத் திரும்பினார் தீபா.
இந் நிலையில் கடந்த 18ம் தேதி தனது உறவினருடன் காவிரி ஆற்றுக்கு சென்றார்தீபா. அங்கு காரில் வந்த புவனேஸ்வரனுடன் தீபா தப்பித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த செளந்தரராஜன், தனது மகள் இறந்து விட்டதாகவும்அவருக்கு ஈமக்கிரியை நடத்தவிருப்பதாகவும் போஸ்டர் அடித்து ஊர் முழுவதும்ஒடடினார்.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் எனது மகள் தீபாவுக்கு ஈமக்கிரியை நடைபெறும் எனசெளந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications