திமுக அரசு சரியில்லை-விஜயகாந்த் சர்ட்டிபிகேட்
கோவை:
சிறப்பான முறையில் செயல்படுவது போல மாயையை ஏற்படுத்தி வருகிறது திமுகஅரசு. உண்மையில் இந்த அரசு சரியாக செயபடவில்லை என்று தேமுதிக தலைவர்விஜயகாந்த் கூறியுள்ளார்.
கோவையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தேமுதிகவில் இணையும் விழாநடைபெற்றது. இதில் கலந்துகொண்டு விஜயகாந்த் பேசுகையில்,தனது ஆட்சி சிறப்பாக நடந்து வருவது போல ஒரு மாயையை ஏற்படுத்த திமுகமுயலுகிறது. உண்மையில் இந்த ஆட்சி சிறப்பாக செய்படவில்லை. கடந்தகாலங்களிலேயே திமுக சிறந்த ஆட்சியைக் கொடுத்ததில்லை. இப்போது மட்டும்எப்படி கொடுத்து விட முடியும்?
சட்டசபைத் தேர்தலில் நாங்கள்தான் முதலில் தேர்தல்அறிக்கையை வெளியிட்டோம.எங்கள் அறிக்கையைப் பார்த்து காப்பி அடித்துத்தான் திமுக, அதிமுக ஆகியவைதங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன.
சுதேசி படத்துடன் நான் ஓய்வுபெற்று விடுவேன், இனிமேல் நடிக்க மாட்டேன்என்றார்கள். ஆனால் எனது கையில் இப்போது 6 படங்கள் உள்ளன. எனது 150வதுபடத்தை இயக்க பல முன்னணி இயக்குனர்கள் போட்டி போட்டுக் கொண்டுள்ளனர்.
எனது பிறந்த நாளான ஆகஸ்ட் 25ம் தேதியை வறுமை ஒழிப்பு நாளாக தேமுதிகவினர்கொணடாடவுள்ளனர். இங்கைத் தமிழர் சிரிக்கும் நாள்தான் எனக்குப்பிறந்த நாள்என்று கூறியிருந்தேன்.
கட்சி தொடங்கி ஒரு ஆண்டுமுடிந்து 2வது ஆண்டு பிறக்கப் போகிறது. 2வது ஆண்டுதொடங்கும் செப்டம்பர் 14ம்தேதி முதல் உறுப்பினர் சேர்க்கையைதீவிரப்படுத்தவுள்ளோம் என்றார்விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications