வெளிநாட்டவர் பங்கேற்ற ஆட்டோ ரேஸ்!
சென்னை:
சர்வதேச வீரர், வீராங்கனைகள் பங்கேறகும் சென்னை முதல் கன்னியாகுமரிவரையிலான ஆட்டோ பந்தயம் சென்னையில் நேற்று தொடங்கியது.
குழந்தைகள் நல நிதிக்காக சர்வசே வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஆட்டோபந்தயத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்தியாவிலேயே இப்படி ஒரு போட்டிநடப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் பந்தயம் சென்னை பெசன்ட நகர் கடற்கரையிலிருந்து தொடங்கியது.கன்னியாகுமரியில் இப்போட்டி முடிவடைகிறது. மொத்தம் ஒருவாரம் போட்டிநடைபெறும்.
திரைப் படத் தயாரிப்பாளர் ராம்குமார் கலந்து கொண்டு போட்டியை தொடங்கிவைத்தார். மொத்தம் 17 ஆட்டோக்கள் போட்டியில் கலந்துகொண்டுள்ளன. இதில் 43பேர் பயணம் செய்கின்றனர். இந்திய வீரர்கள் தவிர, அமெரிக்கா, ஹங்கேரி, ரஷியா,இங்கிலாந்து, ஆர்மீனியா உள்ளிட்டி7 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள்ஆட்டோக்களை ஓட்டிச் சென்றனர்.
வெளிநாட்டுக்காரர்கள் நம்ம ஊர் ஆட்டோவில் ஏறி ஆட்டம், பாட்டம்கொண்டாட்டத்துடன் உற்சாகமாக ஆட்டோ ஓட்டிச் சென்றதை ஏராளமானோர் கூடிநின்று வேடிக்கை பார்த்தனர். ஆட்டோக்களை ஓட்டிய வெளிநாட்டவர்களும் படுஜாலியாக ஆட்டோக்களை ஓட்டினர்.
ஒரு நாளைக்கு அதிகபட்சம் 200 கிலோமீட்டர் தூரம் வரை ஆட்டோக்கள்பயணிக்கும்.












Click it and Unblock the Notifications