இட ஒதுக்கீடு-போராட்டத்தில் டெல்லி டாக்டர்கள்
டெல்லி:
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும்மத்திய அரசின் சட்ட மசோதாவை எதிர்த்து டெல்லியில் ஒரு பிரிவு டாக்டர்கள்போராட்டத்தில் குதிததுள்ளனர்.
அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக டாக்டர்கள் நாளை ஒட்டுமொத்தமாகவிடுப்பு எடுக்கும் போராட்டத்தை நடத்தவுள்ளனர்.ஐ.ஐ.டி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை வெள்ளிக்கிழமைநாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அ ரசு முடிவு செய்துள்ளது.
இதை முற்பட்ட வகுப்பினர் எதிர்த்து வருகின்றனர். டெல்லியில் இந்தப் பிரிவைச்சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள், உயர் கல்வி நிறுவன மாணவர்க்ள்போராட்டத்தில் குதித்துள்ளனர்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்க்ளை போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சிஅடித்தும் கலைத்தனர்.
இந் நிலையில் டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக டாக்டர்கள் நாளைஒரு நாள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் குதிக்கிறார்கள்.
நாளைய தினத்தை கருப்பு தினமாகவும் கடைப்பிடிக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.டாக்டர்கள் போராட்டத்தால் அவசர சிகிச்சை, அறுவைச் சிகிச்சை போன்றவைபாதிக்கப்படாது என்று மருத்துவ விஞ்ஞான கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications