புலி ஆதரவு-வைகோ மீது போலீஸில் காங் புகார்
சென்னை:
சென்னையில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகவும், இந்தியஇறையாண்மைக்கு விரோதகமாவும் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதுநடவடிக்கை எடுக்கக் கோர சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் காங்கிரஸ்கட்சியைச் சேர்ந்த 2 பேர் புகார் கொடுத்துள்ளனர்.
சென்னை தி.நகரில் நடந்த ஈழத்தமிழர் பாதுகாப்பு கூட்டததில் வைகோ பேசுகையில்,ஈழத் தமிழர்கள் நலனில் மத்திய அரசு அக்கறை காட்டாமல் இருப்பதை கடுமையாகசாடினார். மேலும், ஈழத் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு தொடர்பாக அறிவுரைசொல்ல இநதியாவுக்கு என்ன உரிமை உள்ளது. தென் பகுதியில் இன்னொருகாஷ்மீரை உருவாக்க வேண்டாம் என்றும் மிகக் கடுமையாகப் பேசினார்.
அவரது பேச்சு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பைஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சடட்டசபையில் காங்கிரஸ் கேள்வி எழுப்பி வைகோமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியது.
அதற்கு பதில் அளித்தமுதல்வர் கருணாநிதியும், இந்திய இறையாண்மைக்குவிரேதமாக யார் பேசினாலும் சட்டம் தனது கடமையைச் செய்யும் எனத் தெரிவித்தார்.
இந் நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிங்கப் பெருமாள் கோவில் பால்,திருவான்மியூர் ரவி ஆகிய இருவரும் மாம்பலம் காவல் நிலையததில் புகார் மனுஒன்றைக் கொடுத்துள்ளனர்.
அதில் வைகோவின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு விரோதமாக உள்ளது. எனவேஅவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications