மாஜி அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீடுகளில் வருமான வரி சோதனை
திண்டுக்கல்:
முன்னாள் அதிமுக அமைச்சரும், எம்.எல்.ஏவுமான நத்தம் விஸ்வாதனின் வீடுகள்,கல்லூரி, பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் வருமானவரி அதிகாரிகள் இன்று அதிரடிசோதனை நடத்தினர்.
அதிமுகவின் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக விளங்கியவர் நத்தம் விஸ்வநாதன்.கடந்த ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக அவர் இருந்தார். தற்போது நத்தம்தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.விஸ்வநாதன் மீது வருமானத்திற்கு அதிகமான அளவில் சொத்துகள் சேர்த்ததாக புகார்உள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்த காலத்தில் திடீர் பணக்காரர் ஆனார். இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.இன்றுகாலை 10 மணிக்கு இந்த சோதனை தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டியில் உள்ள விஸ்வநாதனின் வீடு, நத்தத்தில்உள்ள பெட்ரோல் பங்க், உலுப்பக்குடியில் உள்ள விஸ்வநாதனுக்குச் சொந்தமானகல்லூரி உள்பட அவருக்குச் சொந்தமான வீடுகளில் வருமான வரி சோதனை நடந்துவருகிறது.
இதேபோல மதுரை, திருச்சி,சென்னையில் உள்ள பிரபல சோலைமலை ஆட்டோமொபைல் நிறுவனத்தின் கிளைகளிலும வருமான வரி சோதனை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications