20 பேரிடம் பண மோசடி: துபாயில் சிக்கிய இந்திய ஏஜென்ட்
Subscribe to Oneindia Tamil
துபாய்:
ஐக்கிய அரபு குடியரசில் வேலை வாங்கித் தருவதாக கூறி இந்தியாவை சேர்ந்த 20பேரை மோசடி செய்ததாக இந்தியாவைச் சேர்ந்த ஏஜென்டு துபாயில் சிக்கியுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்தவர் ராஜன். இவர் பல்வேறு ஏஜென்டுகள் மூலம் ஐக்கிய அரபுநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக 20 பேரிடம் தலைக்கு 10,000 முதல் 12,000தினார் வரை பணம் வாங்கிக் கொண்டு துபாய்க்கு வரவழைத்தார்.சுற்றுலா விசா மூலம் துபாய்க்கு அவர்களை வரவழைத்த ராஜன், வேலைவாங்கித்தராமல் மோசடி செய்து விட்டார். ஏமாந்தவர்கள் ராஜன் தங்கியிருந்தஇடத்தை கண்டுபிடித்து அங்கு வந்து ராஜனை அறையில் பூட்டி வைத்து போராட்டம்நடத்தினர்.
தகவல் அறிந்ததும் இந்திய தூதரக அதிகாரிகள் தலையிட்டு ராஜனை மீட்டனர்.ராஜனை துபாய் போலீஸ் வசம் ஒப்படைக்கப் போவதாக தூதரக அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications