போலீஸுக்குப் பயந்து ஆசிட் குடித்து ஆசிரியை தற்கொலை!
தக்கலை:
தனது கள்ளக் காதல் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினால் மானம் போய்விடுமே என பயந்த ஆசிரியை, அமிலத்தைக் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மணலிக்கரை பகுதியைச்சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் அரசுப் போக்குவரத்துக் கழக டிப்போவில்எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மீனா (37). செம்பருத்திவிளையில் உள்ள தனியார் பள்ளிக் கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.ஆசிரியை மீனாவுக்கும், உண்ணாமலை கடைபகுதியைச் சேர்ந்த வினோத் குமார்என்பவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு இறுகி கள்ளக் காதலாகமாறியது. மீனாவின் தோழியின் உறவினர் தான் வினோத்குமார். அடிக்கடி தனதுதோழி வீட்டுக்கு மீனா செல்லும் போது வினோத்குமாரை சந்தித்துப் பேசி வந்திள்ளார்.அத்தோடு தொலைபேசியிலும் இவர்களது நட்பு தொடர்ந்துள்ளது.
இது மீனாவின் தந்தைக்குத் தெரிய வந்தது. அவர் வினோத்குமார் மீது போலீஸில்புகார் கொடுத்தார். இந்தப் புகாரின் பேரில் தன்னை அழைத்து போலீஸார்விசாரிப்பார்கள், மானம் போய் விடுமே என பயந்துள்ளார் மீனா.
இதையடுத்து வெள்ளிக்கிழமை மாலை அமிலத்தைக் குடித்து விட்டார். உடனடியாகஅவரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மீனாஇறந்தார். அவருக்கு 14 வயதில் காயத்ரி என்ற மகளும், 10 வயதில் கோகுல் என்றமகனும் உள்ளனர்.