துப்பாக்கியுடன் விமானம் ஏற வந்த முன்னாள் மத்திய அமைச்சர்!
சென்னை:
உரிமம் பெற்ற கைத் துப்பாக்கியுடன் விமான நிலையததிற்கு முன்னாள் அமைச்சர் சி.எம்.இப்ராகிம் வந்ததால்பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர்.
தேவகெளடா பிரதமராக இருந்த போது அவரது அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் சி.எம்.இப்ராகிம்.நேற்று இரவு சென்னையிலிருந்து பெங்களூர் செல்வதற்காக மீனம்பாக்கம் விமான நலையத்திற்கு வந்தார்இப்ராகிம்.விமான நலையத்தில் மற்ற பயணிகளின் உடமைகளை பரிசோதனை செய்வது போல இப்ராகிமின்சூட்கேஸையும் பாதுகாவலர்கள் சோதனை போட்டனர். அப்போது சூட்கேஸில் கைத்துப்பாக்கி இருந்ததைப்பார்த்த அதிகாரிகள், துப்பாக்கியை விமானத்தில் அனுமதிக்க முடியாது என்று கூறினர்.
இதையடுத்து தனது துப்பாக்கிக்கு உரிய உரிமம் உள்ளது என்று இப்ராகிம் கூறினார். இதையடுத்துதுப்பாக்கிக்கான உரிமத்தை காட்ட ஒப்புக்கொண்டால், துப்பாக்கியை உடன் எடுத்துச்செல்லலாம் என பாதுகாப்புஅதிகாரிகள் இப்ராகிமிடம் தெரிவித்தனர். இதற்கு இப்ராகிம் ஒத்துக்கொண்டார். அதன்பின்னர்துப்பாக்கியுடன்விமானத்தில் ஏற இப்ராகிம் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தால் விமானம் புறப்பட தாதமம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications