சூது, வாது தெரியாத சாது!
சென்னை:
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சூது, வாது தெரியாத சாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில், இன்று நடந்த காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு கருணாநிதி பதில் அளித்துப்பேசுகையில், அதிமுக ஆட்சியில் தான் காவல்துறை உன்னத நிலையை அடைந்ததாக எதிர்க்கட்சித் துணைதலைவரும், முன்னாள் முதல்வருமான ஓ.பனனீர் செல்வம் பேசினார்.அதில் நான் குறுக்கிட்டுப் பேச விரும்பவில்லை. அப்படி பேசினால் அவர் நோகக்கூடும் என்பதால் அப்போதுபேசவில்லை. எனக்கு சிறு வயதிலிருந்தே பன்னீர்செல்வம் என்ற பெயர் பிடித்தமானதாகும். மூதறிஞர்ராஜாஜிமுதல்வராக இருந்தபோது கட்டாய இந்தியைக் கொண்டுவந்தார்.
அப்போது இதே அவையில் ஏ.டி.பன்னீர் செல்வம் அதை எதிர்ததார். நீங்களும், சோம சுந்தர பாரதியும் தான்இதை எதிர்க்கிறீர்கள் என்றார் ராஜாஜி.அதற்கு பன்னீர்செல்வம் பதிலளிக்கையில், நீங்கள் ஒருவர் மட்டும் தான் இந்தியை கொண்டு வருகிறீர்கள்.எதிர்ப்பு இருவராக இருப்பதால் நாங்கள் தான் மெஜாரிட்டி என்று சாதுரியமாக கூறினார்.
ஏ.டி.பன்னீர் செல்வம் அளவுக்கு ஓ.பன்னீர் செல்வம் சாதுர்யமானவர் என்று சொல்ல மாட்டேன். அவர் சாது, சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். ஆனால் இவரோ, சூது வாது தெரியாத சாது என்றார் முதல்வர்.












Click it and Unblock the Notifications