பெரியார் சிலைக்கு சந்தனம்: 2 சிவசேனா கட்சியினர் கைது
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் பெரியார்சிலைக்கு சந்தனம் பூசிஅவமரியாதை செய்த சம்பவம்தொடர்பாக சிவசேனா கட்சியைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள பெரியார் சிலைக்கு சந்தனம் பூசியும், மாலைஅணிவித்தும், சூடம் ஏற்றி, ஊதுவத்தி கொளுத்தியும் அவமரியாதை செய்யப்பட்டது.இதனால் தி.க.வினர் கடும் காந்தளிப்படைந்தனர்.சட்டசபையிலும்இப்பிரசிசனை எதிரொலித்தது. இந்தசெயலில் ஈடுபட்டவர்கள் பன்றிக்குணம் படைததவர்கள் என்று முதல்வர் கருணாநிதி காட்டமாக பதிலளித்தார். இந்தசெயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்எனவும் அவர் அறிவித்தார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.இருவரும் சிவசேனை கட்சியைச் சேர்ந்தவர்கள். திண்டுக்கல்லில் மணிமாறன்என்பவரை முதலில் நேற்று இரவு போலீஸார்பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் மாவட்ட சிவசேனா செயலாளரான தர்மராஜாஎன்பவரை பல்லவநாயக்கன்பட்டி என்றகிராமத்தில் வைத்து போலீஸார்கைது சய்தனர்.
தர்மராஜா மீது ஏற்கனவே தி.க. பிரகர் ராஜேந்திரன் என்பவரை அரிவாளால்வெட்டியது உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில உள்ளது குறிப்பிடத்தகக்து.












Click it and Unblock the Notifications