லாரி மோதி சிறுவன் பலி: காஞ்சி அருகே சாலை மறியல் -கல்வீச்சு!
காஞ்சிபுரம் :
மணல் லாரி மோதி 12 வயது சிறுவன் பலியானான். இதனால் கொந்தளித்துப் போனகிராம மக்கள் சாலை மறியலில ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள கிரிதரப்பேட்டை கிராமத்தைச்சேர்ந்த மாமல்லன் என்கிற அஜீத்குமார் (வயது 12) நாயக்கன் பேட்டையில் உள்ளஅரசு மேல்நிலைப் பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வந்தான்.பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாமல்லன் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான்.அப்போது தாங்கி என்ற இடத்தில் காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு வேகமாகசென்ற மணல் லாரி மாமல்லன மீது பயங்கரமாக மோதியது. இதில் உடல் நசுங்கிசம்பவ இடதிதலேயே இறந்தான் மாமல்லன்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த லாரி டிரைவர்அக்பரை கைது செய்தனர். மாமல்லனின் உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. தகவல் அறிந்ததும் ஊர் மக்கள் ஒன்று திரண்டு அரசுமருத்துவமனைனக்கு சென்றனர்.
அங்கு பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் உடலைப் பெற்றுக் கொண்ட அவர்கள்கருக்குப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே உடலை சாலையில் போட்டு மறியல்போராட்டத்தில்குதித்தனர்.
பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 100 பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்டவர்கள்நடத்திய போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மணல் லாரிகள்இனிமேல் ஊருக்குள் வரக் கூடாது, ஆட்சித் தலைவர் வந்தால்தான் போராட்டத்தைகைவிடுவோம் என்ற மக்கள் கோஷமிட்டனர்.
ஒரு கட்டத்தில் போலீஸார் பொதுமக்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்கமுயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் விபத்துக்குக் காரணமானலாரியின் டயர்களை தீவைத்து கொளுத்தினர். கண்ணாடிகளை உடைத்தனர்.
மக்கள் நடத்திய கல்வீச்சில் சப்இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர்கள் உள்ளிட்ட4 பேர்காயமடைந்தனர்.
இதையடுத்து எஸ்.பி. அமல்ராஜ் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களிடம் பேச்சுநடத்தினார். அதன் பின்னர் சாலைமறியல், லாரி டயருக்கு தீ வைத்தல், போலீஸார் மீதுகல்வீசித் தாக்குதல் ஆகியவற்றுக்காக 5 கிராமங்களைச் சேர்ந்த 505 பேர் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஆனால், அவர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications