பெரியாறு அணை-பிரதமருடன் கேரள குழு சந்திப்பு
டெல்லி:
முல்லை பெரியார் அணை பிரச்சனை குறித்து கேரள முதல்வர் அச்சுதானந்தன்தலைமையில் அனைத்துக் கட்சி தலைவர்கள், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப்பேசினர்.
இதுகுறித்து கேரள எதிர்க்கட்சி தலைவர் உம்மன் சாண்டி நிருபர்களிடம் கூறியதாவது,உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி முல்லை பெரியாறு அணைக்கட்டின் உயரத்தைஉயர்த்தினால், கேரளாவின் 30 லட்சம் மக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி விடும்என்று பிரதமரிடம் தெரிவித்தோம். தமிழகத்தோடு நாங்கள் நல்லுறவு வைத்துவருகிறோம்.
தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை அளித்து வருகிறோம். எதிர்காலத்திலும்அளிப்போம். எனவே அணையின் உயரத்தை மேற்கொண்டு உயர்த்தாமல் தவிர்க்கதேவையான நடவடிக்கையை பிரதமர் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம் என்றார்.
இதற்கிடையே பெரியாறு அணையை உயர்த்த தமிழகத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதால் அந்தத்தீர்ப்பை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications