தேனீக்கள் தாக்கி 22 நாய்கள், எருது சாவு
Subscribe to Oneindia Tamil
ஜோகன்னஸ்பர்க்:
தென்னாப்பிரிக்காவின் நியூகேஸில் நகரில் படையெடுத்து வந்த தேனீக்கள்கொட்டியதில் 22 நாய்கள் இறந்தன. இவற்றில் 12 நாய்க் குட்டிகளும் அடக்கம்.
நியூ கேஸில் நகரில் விலங்குகள் வதை தடுப்பு மையம் உள்ளது. இந்த மையத்தில்,மீட்கப்பட்ட ஏராளமான விலங்குகள் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.இந்த மையம் உள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான தேனீக்கள் படையெடுத்து வந்தன.கொடிய விஷம் கொண்ட அந்த தேனீக்கள் மையத்தில் இருந்த 22 நாய்கள் மற்றும்குட்டிகளை சூழ்ந்து கொண்டு தாக்கின
வலி தாங்கமுடியாமல் துடித்த 22 நாய்களும் சிறிது நேரத்திலேயே இறந்து போயின.இதேபோல ஒரு எருதையும் தேனீக்கள் கூட்டம் தாக்கியதில் அதுவும் இறந்தது.
இதுவரை இப்படி ஒரு தேனீக்கள் கூட்டத்தை நான் பார்த்ததே இல்லை என்று அந்தமையத்தின் தலைவர் பியூலா இங்கபிரட் மிரட்சியுடன் கூறுகிறார்.
தேனீக்கள் படையெடுத்து வந்ததைப் பார்த்த மையத்திற்கு வந்திருந்த பொதுமக்கள்அலறி அடித்துக் கொண்டு ஓடி வீடுகளுக்குள் புகுந்ததால் தப்பினர்.












Click it and Unblock the Notifications