கல்கி பகவான் ஆசிரமத்தில் பெண் மர்ம சாவு

Subscribe to Oneindia Tamil

சித்தூர்:

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள கல்கி பகவான் ஆசிரமத்தில் புனே நகரைச்சேர்ந்த 19 வயது பெண் மர்மமானமுறையில் மரணமடைந்தார்.

அதுகுறித்து போலீஸாருக்குத் தெரிவிக்காமல் பிணத்தை ஆசிரம நிர்வாகிகள் எரித்துவிட்டதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது. சில நாட்களுக்குமுன் இந்த ஆசிரமத்தில் வசித்து வந்த புனே நகரைச் சேர்ந்த ஆஷா என்ற 19 வயதுபெண் மரணமடைந்தார்.

இதுகுறித்து ஆசிரம நிர்வாகிகள் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கவில்லை.மாறாக, இரவோடு இரவாக அவர்கள் ஆஷாவின் பிணத்தை எரித்து விட்டனராம்.எனவே ஆஷா சாவில் மர்மம் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் போலீஸாரிடம் புகார் கொடுத்தும் போலீஸார் அதைக்கண்டுகொள்ளவில்லை. ஆனால், கிராம மக்களிடையே இதுதொடர்பாகமுனுமுனுப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து தற்போதுபோலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

இருப்பினும் இதுவரை ஆசிரமத்தைச் சேர்ந்த யாரையும் போலீஸார்விசாரிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+