இன்று காலை 11 மணிக்கு.. வந்தே மாதரம்!
சென்னை:
இந்தியா முழுவதும் இன்று காலை 11 மணிக்கு வந்தே மாதரம் பாடலை பாடஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் முஸ்லீம்களில் ஒரு பிரிவினரும்,சீக்கியர்களும் இப்பாடலலைப் பாட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வங்கக் கவி பக்கிம் சந்திரசாட்டர்ஜி எழுதிய தேச பக்திப் பாடலான வந்தே மாதரம்பாடப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இன்று அப்பாடல் பாடப்பட்டுநூறாண்டுகள் நிறைவுறுகின்றன. இதையொட்டி நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில்இப்பாடலைப் பாட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஆனால் இப்பாடல் துர்கா தேவியை வழிபடுவதாக உள்ளதால் இப்பாடலை கட்டாயம்பாட வேண்டும் என வற்புறுத்தக் கூடாது என முஸ்லீம் சமுதாயத்தினர் மத்தியஅரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இப்பாடலை பாட வேண்டும் என்பதுகட்டாயமல்ல என்று மத்திய அரசு விளக்கியது.
இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த சர்ச்சைக்கு இடையே, இன்றுக்காலை 11 மணிக்கு வந்தே மாதரம் பாடல் நாடு முழுவதும் ஒலிக்கப்படுகிறது. பள்ளி,கல்லூரிகள் தவிர அரசு அலுவலகங்களிலும் வந்தே மாதரம் பாடல் பாடப்படவுள்ளது.
சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், ஒரிசா,கர்நாடகா ஆகிய மாநிலங்களில்வந்தே மாதரம் பாடல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கட்டாயம் இல்லைஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆளுநர் மாநிலங்களிலும் கட்டாயம் பாடவேண்டியதில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சீக்கியர்களும் இந்தப் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான நிகழ்ச்சிகளில் சீக்கியர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் எனசிரோண் மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications