6 மனைவிகளுடன் யோபு ஆந்திராவுக்கு ஓட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மோசடி பிஷப் யோபு சரவணனின் பெண் உதவியாளர் எலிசபெத்தை போலீஸார்கைது செய்துள்ளனர்.

ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம் என்று கூறி தமிழகம் முழுவதும்நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களிடம் பல கோடி பணத்தை சுருட்டி விட்டு தனது 6மனைவிகளோடும் தலைமறைவாகி விட்டார் யோபு சரவணன். அவர் ஆந்திராவுக்குஓடிவிட்டதாக தெரியவந்துள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடியிலும், சென்னை முகப்பேரிலும் இவர் கல்வாரி மிஷன்அறக்கட்டளை அலுவலகங்களை அமைத்து இந்த மோசடியில் ஈடுபட்டார் யோபுசரவணன்.

கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வரை இவர் மோசடிசெய்திருக்கக் கூடும் எனபோலீஸார் சந்தேகிக்கிறர்கள். போலீஸார் வழக்குப் பதிவு செய்ததும் யோபு சரவணன்தனது 6 மனைவிகளோடு தப்பி விட்டார். அவரை போலீார் தவிரமாக தேடிவருகின்றனர்.

யோபு சரவணனின் கூட்டாளிகளான ராஜனும், டேணியலும் ஏறகனவே போலீஸில்சிக்கியுள்ள நிலையில் தற்போது யோபுவின் பெண் உதவியாளரான எலிசபெத்தைபோலீஸார் கைது செய்துள்ளனர். வேலூரில் வைத்து எலிசபெத் கைதுசெய்யப்பட்டார்.

அவரை சென்னைக்குக் கொண்டு வந்த சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார்தீவிர விசாரணை நடத்தினர். அதன் பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைககப்பட்டார்.

எலிசபெத் வேலூர் அருகே உள்ள கரிகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் எலிசெபத். பிளஸ் டூவரை படித்துள்ளவர் கடந்த 2 வருடமாக யோபுவிடம் உதவியாளராக இருந்து வந்தார்.அவருக்கு மாதம் 3000 ரூபாய் சம்பளமாக கொடுத்து வந்தார் யோபு. மேலும்,எலிசபெத்துக்கு தனி வீடும் கட்டிக்கொடுத்துள்ளார்.

அலுவலகத்திற்கு வரும் காண்டிராக்டர்க்ளை மயக்கும் தொணியில் பேசிஅவர்களிடமிருந்து பணம் கறக்க எலிசபெத்தை பயன்படுத்தியுள்ளார் யோபுசரவணன். மேலும், எலிசபெத்துக்கும், யோபுவுக்கும் நெருக்கமான தொடர்பும்இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்தே போலீஸார் எலிசபெத்தை கைதுசெய்துள்ளனர்.

இவரைத் தவிர யோபுவின் கூட்டாளியான் ராஜன் என்பவரையும், கேரளாவைச் சேர்ந்தபாதிரியார் டேணியல் என்பவரையும் போலீஸ் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் யோபு குறித்த பல தகவல்கள் போலீஸாருக்குகிடைத்துள்ளன. முதலில் யோபுவுக்கு நான்கு மனைவிகள் என்று கூறப்பட்டது.ஆனால் இப்போது மனைவிகளின் எண்ணிக்கை 6 என்று அப்-டேட் ஆகியுள்ளது.

வேலூரைச் சேர்ந்த சாந்தி, காட்பாடியைச் சேர்ந்த மெர்சி ஆகிய இருவர் மட்டுமேஅதிகாரப்பூர்வ மனைவிகள். மற்ற நான்கு பேரையும் அவர் பின்னர் சேர்த்துக்கொண்டாராம். இவர்கள் நான்கு பேரும் அவரது அலுவலகங்களில வேலை பார்த்தவந்த பெண்கள்.

6 பேருக்கும் தனித்தனி பங்களா கட்டிக் கொடுத்துள்ளார். 6 பேரின் பெயரிலும் தலாரூ.1 கோடி வரைக்கும் வங்கியில்முதலீடு செய்து வைத்துள்ளார்.

தற்போது மனைவிகள் 6 பேரையும் அழைத்துக் கொண்டு அவர்ஆந்திராவுக்கு தப்பிஓடிவிட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும், 6 பேரின் பேரிலும்வங்கியில் போட்டு வைத்திருந்த பணத்தையும் அவர் எடுத்துக் கொண்டுதப்பியுள்ளார்.

இதையடுத்து யோபுவைத் தேடி ஆந்திராவுக்கு போலீஸ் படை விரைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+