பவார் கட்சியுடன் இணைகிறார் கருணாகரன்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
கேரள முன்னாள் முதல்வர் கருணாகரனின் ஜனநாயக இந்திரா காங்கிரஸ் கட்சி, மத்திய அமைச்சர் சரத் பவாரின்தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைகிறது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கருணாகரன், தனது மகன் முரளீதரனைத் தலைவராகக் கொண்டுஜனநாயக இந்திரா காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார்.கடந்த சட்டசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கரஸ் கட்சியுடன் கருணாகரன் கட்சி கூட்டணிவைத்தது. இதில் இக்கட்சிக்கு படுதோல்வி கிடைத்தது.
இந்த நிலையில் தனது கட்சியை பவார் கட்சியுடன் இணைக்க கருணாகரன் முடிவு செய்தார். கட்சிநிர்வாகிகளுடன் இதுகுறித்து கருணாகரன் பேசியுள்ளார். கருணாகரன் கட்சியை தேசியவாத கட்சியுடன்இணைத்துக் கொள்ள பவார் கட்சியின் செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
வருகிற 12ம் தேதி சரத்பவார் கோழிக்கோடு வருகிறார். இங்கு கருணாகரன், முரளீதரன் ஆகியோருடன் பவார்ஆலோசனை நடத்துகிறார். அதன் பின்னர் இணைப்பு விழா குறித்து முடிவு செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications