கோவையில் பிடிபட்ட தீவிரவாதிகள் மணிப்பூர் கொண்டு செல்லப்பட்டனர்!
கோவை:
கோவையில் பிடிபட்ட மணிப்பூர் தீவிரவாத அமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும்அவரது உதவியாளர்ஆகிய இருவரும் இன்று விமானம் மூலம் மணிப்பூர் கொண்டுசெல்லப்பட்டனர்.
மணிப்பூரை தலைமையிடமாக கொண்டு ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி என்றதீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. வட கிழக்கு மாநிலங்களை இணைத்துதனி நாடாக்க வேண்டும் என்பதுதான் இதன் கோரிக்கை. இந்த அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பாகும்.இந்த அமைப்பின் பொதுச் செயலாளரான தோம்பா என்ற டோம்பியும்,அவரதுஉதவியாளர் சலாம் மங் என்பவரும் சமீபத்தில் கோவையில் உள்ள கங்காமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 5ம்தேதி ராணுவ அதிகாரிகளும், மணிப்பூர் போலீஸாரும் கைது செய்தனர்.
கோவை நீதிமன்ற உத்தரவின்படி இருவரும் கோவை மத்திய சிறையில்அடைக்கப்பட்டனர். இருவரையும் மணிப்பூர் அழைத்து செல்ல மணிர்பூர் போலீஸார்நடவடிக்கை எடுத்தனர். இதைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் இருவரும் இன்றுகாலை விமானம் மூலம் மணிப்பூர்அழைத்து செல்லப்பட்டனர்.
இதற்காக மணிப்பூரிலிருந்து எஸ்.பி. தனேந்திரகுமார் சிங் தலைமயில் 7 பேர்கொண்ட போலீஸ் குழு கோவை வந்தது. காலை 10 மணிக்கு கோவை பீளமேடுவிமான நிலையத்திலிருந்து பாதுகாப்புடன் இருவரையும் இவர்கள் இம்பாலுக்குஅழைத்துச் சென்றனர்.
இருவரும் மணிப்பூர் அழைத்துச் செல்லப்படுவதையொட்டி கோவை நகரில்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications