பஹ்ரைன்- கோமாவில் கிடக்கும் இந்தியர்
Subscribe to Oneindia Tamil
துபாய்:
இந்தியாவைச் சேர்ந்த தச்சுத் தொழிலாளி ஒருவர் பஹ்ரைனில் ரோட்டில் சுய நினைவின்றி கிடந்தார்.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவர் தொடர்ந்து கோமா நிலையிலேயே இருந்து வருகிறார்.மனாமா நகரில் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி சாலையில் சுய நினைவின்றி அவர் கிடந்தார். இதையடுத்துமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது பெயர் சுர்ஜித் சிங் பேடி என்பதும் அவர் பஞ்சாபைச் சேர்ந்தவர் என்றும் மட்டும் தெரியவந்துள்ளது.மற்றபடி அவர் பஹ்ரைனில் எங்கு வேலை பார்த்தார், அவரது சொந்த ஊரின் முகவரி ஆகியவை தெரியவில்லை.
இதையடுத்து அவரை அடையாளம் காணும் பணியில் பஹ்ரைன் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications