சசிகலாவுக்கு சம்மன்: ஜெ. வீட்டில் மீண்டும் ஒட்டப்பட்டது!
சென்னை:
சொத்துக் குவிப்பு வழக்கில் வரும் 22ம் தேதி பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நேரில்ஆஜராக வேண்டும் என சசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ்அனுப்பியுள்ளது. இந்த சம்மன் சசிகலா வசிக்கும் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டஇல்லத்தின் வாசலில் இரண்டாவது முறையாக மீண்டும் ஒட்டப்பட்டுள்ளது.
வருமானத்தை மீறி சொத்து சேர்த்த ஜெயலலிதா, சசிகலா, தினகரன் உள்ளிட்டோர்மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் விசாரணையில்உள்ளது.இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு வழக்கில் சம்பபந்தப்பட்ட அனைவருக்கும்நோட்டீஸ்அனுப்பியது தனி நீதிமன்றம். சசிகலாவைத் தவிர அனைவரும் நோட்டீஸைவாங்கி விட்டனர்.
இதைத் தொடர்ந்து சசிகலாவுக்கு அனுப்பப்பட்ட சம்மனை பெற அவர் மறுப்பதால்அதை அவரது வீட்டு வாசலில் ஒட்ட வேண்டும் என்று கோரி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
அந்த கோரிக்கை ஏற்கப்பட்டது. இதையடுத்து சசிகலாவுக்கு அனுப்பப்பட்ட சம்மனைஅவரது வீட்டு வாசலில் ஒட்டுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்துகடந்த வாரம் போலீஸார் சசிகலா வசிக்கும் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டஇல்லத்தில் ஒட்டினர்.
ஆனால் அந்த நோட்டீஸை ஜெயலலிதாவின் வேலையாட்கள் கிழித்துப் போட்டுவிட்டனர்.
இந் நிலையில், வரும் 22ம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படிஉச்சநீதிமன்றம் சசிகலாவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த சம்மன் நகலையும் சசிகலா வீட்டு வாசலில் ஒட்டுமாறு உச்சநீதிமன்றம்உத்தரவிட்டது. அதன்படி நேற்று மாலை இந்த சம்மன் நகலும் ஜெ-சசிகலா வீட்டுவாசலில் ஒட்டப்பட்டது.
தேனாம்பேட்டை உதவி ஆணையாளர் கண்ணபிரான் தலைமையிலான போலீஸார்சம்மனை ஜெயலலிதா வீட்டு வாசலில் ஒட்டினர்.












Click it and Unblock the Notifications