17ம் தேதி முதல் இலவச நிலம் வழங்கல் துவக்கம்
சென்னை:
இலவச நிலம் வழங்கும் திட்டத்தை வரும் 17ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு இலவசமாக நிலம்வழங்கும் திட்டத்தை தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி முதல்வர் கருணாநிதி தொடங்கிவைக்கிறார். திருவள்ளூரில் அவர் இத் திட்டத்தை தொடங்கி வைப்பார்.
அன்று தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில்லாத 6,881 ஏக்கர் தரிசு புறம்போக்கு நிலம், பண்படுத்தப்பட்டு 5,076 நிலமற்ற விவசாயக் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.
அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு உள்ள 10,564 ஏக்கர் தரிசு புறம்போக்கு நிலம், நிலமற்ற 14,083 சிறு குறுவிவசாயக் குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். 5,790 சிறு குறு விவசாயிகளுக்கு சொந்தமான 8,876ஏக்கர் பட்டா தரிசு நிலங்களை, அரசின் செலவில் மேம்படுத்தி விளை நிலங்களாக மாற்றி அவர்களுக்கேவழங்கப்படவுள்ளது.
17ம் தேதியன்று 24,949 ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு 26,321 ஏக்கர் நிலம் பண்படுத்திவழங்கப்படவுள்ளது.
அந்த தினத்தன்று அனைத்து மாவட்டங்களிலும் இலவச நிலம் வழங்கும் விழாக்களில் கலந்து கொள்ளும்அமைச்சர்கள் ஏழை விவசாய குடும்பங்களுக்கு நிலம் வழங்குவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications