தலைமைச் செயலாளரின் மெகா பிரஸ் மீட்!
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி வருகிற 19ம் தேதி 38 துறைச் செயலாளர்களுடன்பிரமாண்ட பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
தமிழக அரசின் சார்பில் முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் அவ்வப்போது செய்தியாளர்கள் கூட்டங்களுக்குஏற்பாடு செய்வதுண்டு. அதிகாரப்பூர்வமாக இந்த பேட்டிகளின் போது கூடவே சம்பந்தப்பட்ட துறைசெயலாளர்கள் மட்டும் இருப்பார்கள். முதல்வரின் பேட்டி என்றால் தலைமைச் செயலாளர், நிதிச் செயலாளர்உள்ளிட்ட முக்கிய துறை செயலாளர்கள் மட்டும் உடன் இருப்பர்.இந்த நிலையில் கிட்டத்தட்ட 38 துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் திரிபாதி பிரமாண்டமானபத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார்.வருகிற 19ம் தேதி மாலை கூட்டப்பட்டுள்ள இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தலைமைச் செயலகத்தில்உள்ள 38 துறை செயலாளர்களும் உடன் இருப்பர் என திரிபாதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொடர்பான செய்திகள்பு அத்தனை துறை செயலாளர்களும் தலைமைச் செயலாளருடன் சேர்ந்துசெய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டதில்லை என்று கூறப்படுகிறது.
இந்த மகா பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு சென்னையில் உள்ள அனைத்துபத்திரிக்கைகளுக்கும், மூத்த பத்திரிக்கையாளர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications