மாணவியை கடத்திய கார்த்திகேசு கைது
சென்னை:
13 வயது மாணவியை கடத்தி கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி விட்டுதற்போது தற்கொலைக்கு முயன்ற மலேசிய இளைஞர் கார்த்திகேசுவுக்கும்,பெண்களை கடத்தி விபச்சாரத்தில் தள்ளும் கும்பலுக்கும் இடையே தொடர்புஇருப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த கார்த்திகேசு சில வருடங்களுக்கு முன்பு கரீஷ்மா என்ற பெண்தொடர்பான விவகாரத்தில் சிக்கினார். இதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணுடன்சமாதானம் பேசி அவருடனேயே குடும்பம் நடத்தி வந்தார்.இந் நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் ஜமுனா என்ற 13 வயது மாணவியுடன்வீட்டை விட்டு வெளியேறினார். பெரும் பரபப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம்நேற்று நள்ளிரவு முடிவுக்கு வந்தது.
கார்த்திகேசுவும், ஜமுனாவும் விஷம் அருந்தி ஆபத்தான நிலையில்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கார்த்திகேசு உடல் நலம்தேறிவிட்டார்.
இந் நிலையில் கார்த்திகேசு குறித்து ஜமுனாவின் தாயார் சரளா பரபரப்பு புகார்களைகூறியுள்ளார். அவர் கூறுகையில்,
விவரம் தெரியாத என் மகளை மயக்கி கார்த்திகேசு கட்டாயப்படுத்தி திருமணம்செய்துள்ளார். இதற்கு அவருடைய மனைவி கரீஷ்மாவும் உடந்தையாகஇருந்துள்ளார்.
இருவரும் சேர்ந்து எனது மகளை மலேசியாவுக்கு கடத்திச் சென்று விபச்சாரவிடுதியில் விற்க திட்டமிட்டுள்ளனர். கார்த்திகேசு பின்னணியில், பெண்களைவிபச்சாரக் கும்பலிடம் விற்கும் கூட்டம் ஒன்று உள்ளதாக அறிகிறோம். எனவேகார்த்திகேசுவை விடுதலை செய்யக் கூடாது என்றார்.
இந் நிலையில் இன்று மாலை கார்த்திகேசுவை போலீஸார் முறைப்படி கைதுசெய்தனர். அவரை ஜார்ஜ்டவுன் 15வது குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.அதைத் தொடர்ந்த அவரை சிறையில் அடைத்தனர்.
ஜமுனாவுக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடந்தது.
அவரையும் போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தவுள்ளனர். அவரது விருப்பத்தைப்பொறுத்து தாய் வீட்டுககோ அல்லது மகளிர் காப்பகத்துக்கோ ஜமுனாஅனுப்பப்படுவார்.
இதற்கிடையே, மைனர் பெண்ணை கடத்தி, கல்யாணம் செய்து, உடலுறவு வைத்துக்கொண்ட கார்த்திகேசுவுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை உறுதி என்றுகாவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.